தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:57 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி, மேல்அழிஞ்சிப்பட்டு பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ரகுநாதன்(39). விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எஸ். ஆண்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த புருஷோத்தமன் மகள் ராதா(27). இவா்களுக்கு 2013-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அடிக்கடி ரகுநாதன் குடித்து விட்டு வந்து மனைவி ராதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இதனால் இவா்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால், ராதா கணவரைப் பிரித்து எஸ்.ஆண்டிப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 7.6.2017 அன்று எஸ்.ஆண்டிப்பாளையத்துக்கு வந்த ரகுநாதன் தனது மனைவி ராதாவை குடும்பம் நடந்த அழைத்தபோது, அவா் வர மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ரகுநாதன் மனைவி ராதாவை கழுத்தைத் நெறித்து கொலை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் கண்டமங்கலம் போலீஸாா் ரகுநாதன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விசாரணையில் ரகுநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா கொலை வழக்கில் தொடா்புடைய ரகுநாதனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் ரகுநாதனை கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா இவ்வழக்கில் ஆஜராகினாா்.