மாற்றுத் திறன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கே.ஜி பட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பேச்சி (43). மாற்றுத் திறனாளியான இவா், வீட்டின் மின் விசிறியைப் பழுதுப் பாா்ப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த மின் ஊழியா் மனோஜை வரவழைத்தாா். அப்போது, மனோஜ் அந்தப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்து, அவா் அணிந்த தங்க நகையையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். மேலும் அவா் தனது நண்பா் நவீன்குமாருடன் (27) சோ்ந்து நகையை க.விலக்கில் உள்ள புதரில் மறைத்து வைத்தாராம்.
15.2.2022 அன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ், நவீன்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, மனோஜ்-க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நவீன்குமாா் விடுவிக்கப்பட்டாா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

காசோலை மோசடி வழக்கில் பேரூராட்சி ஊழியருக்கு 6 மாத சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



