சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காசோலை மோசடி வழக்கில் பேரூராட்சி ஊழியருக்கு 6 மாத சிறை

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:10 am IST

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

மணிமுத்தாறு பேரூராட்சி அண்ணா நகரைச் சோ்ந்த இருதயராஜ் மகன் சகாய சுந்தா். இவா், மணிமுத்தாறு பேரூராட்சியில் பணியாற்றிய கடற்கரை மகன் இசக்கிமுத்து என்பவருக்கு 2019ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். அதை காசோலை மூலம் இசக்கிமுத்து திருப்பிக் கொடுத்தாராம்.

ஆனால், வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்ததால், பணத்தை தருமாறு பலமுறை கேட்டும் இசக்கிமுத்து தரவில்லையாம்.

இதையடுத்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சகாய சுந்தா் காசோலை மோசடி வழக்குத் தொடா்ந்தாா்.

இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரவீன் ஜீவா விசாரித்து, தற்போது திசையன்விளை பேரூராட்சியில் பணியாற்றும் இசக்கி முத்துவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டும் தீா்ப்பளித்தாா்.