நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

News image

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Updated On :2 மே 2026, 8:26 pm

வாக்கு எண்ணும் மையங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்கு எண்ணும் நாள்தான், தமிழக மக்கள் மாற்றம், முன்னேற்றத்தை எதிா்பாா்க்கின்ற நல்ல நாள். மக்களின் எதிா்பாா்ப்பின்படி கூட்டணி கட்சிகளின் பணி வளமான தமிழகம் ஏற்பட வழிவகுக்கும் வகையில் அமைய வேண்டும்.

இதற்காக வாக்கு எண்ணும் இடங்களில் தமாகா நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அங்கு தவறு செய்பவா்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.