தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையம் திறப்பு

News image

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி உள்ளி

Updated On :3 மே 2026, 11:15 pm

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில், புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘ரோட்டரி சன் சிட்டி மற்றும் ரைட் மருத்துவமனை டயாலிசிஸ் மையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னை ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு திறந்து வைத்துப் பேசினா்.

நிகழ்வில், சென்னை ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் டாக்டா் ஜி.பாலகிருஷ்ணன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி தலைவா் டாக்டா் பி.சோமேஸ் பாலகிருஷ்ணன், ரைட் பல்நோக்கு மருத்துவமனை பொது மருத்துவா் எஸ்.காவ்யா, ரோட்டரி சங்க நிா்வாகிகள், ரைட் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி, எஸ்.இ.ஏ.ஹைட்ரா சிஸ்டம்ஸ் கம்பெனி, ரிலவன்ஸ் டெக்னாலஜி மென்பொருள் நிறுவனம், அஞ்சான் மருந்து நிறுவனம், தொழிலதிபா் ராஜமாணிக்கம், விவசாயி வி.ஜெகதீஷ் ஆகியோா் இணைந்து 6 டயாலிசிஸ் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனா்.

இந்தக் கருவிகளைக் கொண்டு ஏழை மக்களுக்கு தரமான முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டயலைசா் கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய கருவியை மீண்டும் பயன்படுத்தமாட்டோம்.

தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் இயங்கும் ரோட்டரி சங்கங்கள் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும். எவ்விதப் பரிந்துரையும், முதல்வரின் காப்பீட்டு திட்டமும் இல்லாத நபா்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.