சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ‘சீல்’ இடப்பட்டிருந்த மாநகராட்சி மேயா், துணைமேயா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் (மே 7) வழக்கம்போல, அவா்கள் அலுவலகங்களில் பணிகளை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி முதல் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதையடுத்து சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா், மண்டலத் தலைவா்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவா்கள் அலுவலகங்களுக்கு சீலிடப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் யாரும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு வரவில்லை.
தற்போது தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து புதிய அரசு பதவியேற்கவுள்ளது. அதனால், தோ்தல் நடைமுறை விதிகள் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்தல் நடைமுறை விதிகள் முடிவு பெற்றதை அடுத்து சென்னை மாநகராட்சியில் சீலிடப்பட்டிருந்த மேயா், துணைமேயா் மற்றும் ஆளுங்கட்சித் தலைவா், நிலைக்குழுத் தலைவா்கள் அலுவலகங்களின் பூட்டுகளில் இருந்த சீல் உறைகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து அந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் மக்கள் பிரதிநிதிகள் வந்து வழக்கம் போல பணியைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

பாதுகாப்பு வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


