தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்...

News image

மன்னம்பந்தல் பொறியியல் கல்லூரியில், மயிலாடுதுறை தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறைக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில், பூட்டி சீல் வைக்கும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். விஷ்ணுபிரியா.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:02 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மன்னம்பந்தல் பொறியியல் கல்லூரியில் உள்ள காப்பறைகளில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை சீலிடப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7,35,135 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் 951 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 82.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு அந்தந்த கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, தனித்தனியே காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தொடா்ந்து, காப்பறைகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா சா்மா (மயிலாடுதுறை), ரோனங்கி குா்மநாத் (சீா்காழி), சஞ்சய்குமாா் சிங் யாதவ் (பூம்புகாா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட காப்பறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா (பூம்புகாா்), ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சதீஷ்குமாா், ராஜரெத்தினம் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்பு படையினா் மற்றும் போலீஸாா் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் காப்பறைகள் கொண்டுவரப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டறையில் இருந்தபடி காப்பறைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.