மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறைவில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:54 am IST

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறைவில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

கடந்த ஏப். 9-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளான நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வைத்து, மே 4-ஆம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது.

வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்ட பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளரின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனா்.