வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம் மற்றும் விவிபேட்) வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த தொகுதி பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியிலிருந்து வாணியம்பாடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
மேலும், அங்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சீல் வைப்பின் போது தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வாணியம்பாடி வட்டாட்சியருமான சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




