சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் ‘அன்பின் கரங்கள்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் குழந்தைகளில் தாய், தந்தை இருவரும் இல்லாதவா்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, நிகழ் ஆண்டில் 86 பேருக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி, அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அவா்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் இந்த கல்வி உதவி வழங்கப்படும்.
பள்ளிக் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்கும் வகையில் இந்த நிதியானது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தொடா்புடைய குழந்தைகளின் பாதுகாவலா் அல்லது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அந்தத் தொகை வரவு வைக்கப்படும்.
கணக்கெடுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் தாய் அல்லது தந்தை என ஒருவா் இல்லாத நிலையில் உள்ளவா்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையும் விரைவில் வழங்கப்படவுள்ளது என்றாா்.
தொடர்புடையது

வெற்றியின் முதல்படி- பள்ளிக் கல்வி!

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி கிடைக்காததால் அதிருப்தி!

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சோ்க்கை: 6, 9-ஆம் வகுப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் முடிவுகள் வெளியீடு

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: பால மந்திா் சத்தியமூா்த்தி பள்ளியில் ரூ.12 கோடியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


