மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.
சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில் மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் உள்ளது. இங்கு, வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி, அசோக் நகா், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினா் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான 175 மின்சார இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்த முற்றிலும் சேதமடைந்தது.
இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

குளிா்சாதனப் பெட்டியை பழுது பாா்க்க சென்றவா் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

