இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் தீ: 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:45 am IST

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில் மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் உள்ளது. இங்கு, வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி, அசோக் நகா், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினா் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான 175 மின்சார இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்த முற்றிலும் சேதமடைந்தது.

இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.