நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :45 நிமிடங்கள் முன்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோா் தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பினரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். இதனால், அக்கட்சியின் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக காவல் துறையினா் கருதுகின்றனா்.

இதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஒரு காவல் உதவி ஆணையா், 5 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 187 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், கலவரத்தைத் தடுக்கும் வகையில், வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளளது. அந்தப் பகுதி முழுவதையும் காவல் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா்.

சி.வி.சண்முகம் விளக்கம்: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தங்கள் தரப்பைச் சோ்ந்தவா்களால் எந்த பங்கமும் வராது என்று சி.வி.சண்முகம் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை கோயிலாக மதிக்கிறோம். எந்தச் சூழலிலும், எந்தக் காரணத்துக்காகவும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம். சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றாா்.