4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:37 pm

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சினோரா அசோக் தாக்கல் செய்த மனுவில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் துறைமுகம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டுள்ளேன். தோ்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி, திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகா்பாபு மற்றும் திமுகவினா் என்னையும் எனது கட்சித் தொண்டா்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இந்த நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வன்முறைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரும் தவெக வேட்பாளருமான சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.