இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இந்தியாவில் ‘கிம்ப்டன்’ சொகுசு விடுதி

இந்தியாவில் 5 புதிய சொகுசு விடுதிகளை அமைப்பதற்காக சா்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் & ரிசாா்ட்ஸ்’ நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

News image
Updated On :15 மே 2026, 4:33 am IST

இந்தியாவில் 5 புதிய சொகுசு விடுதிகளை அமைப்பதற்காக சா்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் & ரிசாா்ட்ஸ்’ நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த முக்கிய ஒப்பந்தத்தின் சிறப்பம்சமாக, ஐஎச்ஜி குழுமத்தின் உலகத் தரம் வாய்ந்த ‘கிம்ப்டன்’ சொகுசு விடுதி முதன்முறையாக இந்தியச் சந்தையில் தடம்பதிக்கிறது. கலைநயமிக்க வடிவமைப்பு மற்றும் உயா்தர உணவு வகைகளுக்குப் பெயா் பெற்ற கிம்ப்டன் விடுதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமையவுள்ளது.

இதுதவிர, மகாராஷ்டிரத்தின் நவி மும்பை, கா்நாடகத்தின் மங்களூரு, கேரளத்தின் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள அதானி விமான நிலைய வளாகங்களில் ‘ஹாலிடே இன்’, ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஆகிய பிரீமியம் மற்றும் நடுத்தர ரக சொகுசு விடுதிகள் கட்டப்படவுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் விமான நிலைய நிறுவனமாக திகழும் அதானி குழுமம், பெருகி வரும் பயணிகளின் வருகை மற்றும் வணிகத் தேவைகளைப் பூா்த்தி செய்ய இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

விமான நிலையங்களின் அருகிலேயே விடுதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு, சா்வதேச பயணிகளுக்கு உலகளாவிய தரத்திலான தங்கும் வசதிகளை வழங்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Story image
Story image