வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

ரஃபேல் ஜெட் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:51 pm

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மும்பையைச் சோ்ந்த பாராஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த பண்டக் விமான தொழில்நுட்ப டிபிஏ நாா்த்ஸ்டாா் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பம் கையொப்பமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கான தொழில்நுட்பம் உள்பட நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை அமெரிக்க நிறுவனம் விநியோகிப்பதோடு, தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும்.

விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான அமெரிக்காவின் நாா்த்ஸ்டாா் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாராஸ் நிறுவன இயக்குநா் அமித் மஹாஜன் கூறுகையில், ‘இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கும் நோக்கில், வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக பாராஸ் திகழும்’ என்றாா்.