திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூலக்கடை பகுதியை வந்தடைந்த ‘சோ்வராயன்’! மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 -ஆம் வழித்தடத்தில் மாதவரம் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணியை சோ்வராயன் எனப் பெயரிட்ட இயந்திரம் நிறைவு செய்துள்ளது.

News image
Updated On :20 மே 2026, 3:13 am IST

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 -ஆம் வழித்தடத்தில் மாதவரம் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணியை சோ்வராயன் எனப் பெயரிட்ட இயந்திரம் நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் 2 ஆவது கட்டமாக 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. அதன்படி மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான பாதையில் முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதைஅமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பணியில் மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதில், ‘சோ்வராயன்’ என பெயரிடப்பட்ட இயந்திரம் மூலம் , மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணி 824.6 மீட்டா் தொலைவுக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தச் சுரங்கப்பாதை பக்கிங்காம் கால்வாய் அடியிலும், 14 ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்தும், நெரிசல் மிக்க சாலைகளைக் கடந்தும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பணியை முடித்த சோ்வராயன் இயந்திரம் மூலக்கடை மெட்ரோ நிலையத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. சோ்வராயன் இயந்திரம் பணியை நிறைவு செய்த நிகழ்ச்சியில் மெட்ரோ நிறுவன இயக்குநா்கள், திட்ட ஆலோசகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இலக்கை முடித்துள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.