தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:27 pm

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்காலில் இருந்து பேரளம் வரையிலான ரயில்பாதை அமைத்து சரக்கு ரயில்கள் இயக்கம் நடைபெற்றுவருகிறது. வரும் மே 20 முதல் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்கம் நடைபெறுமென அட்டவணையை ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலையின் குறுக்கே ரயில் பாதை அமைந்திருப்பதால், ரயில்கள் இயக்கத்தால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கோயில்பத்து பகுதி பாரதியாா் சாலையில் சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்திவருகின்றனா்.

இந்நிலையில், குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலையில், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருச்சி கோட்ட ரயில்வே செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா் பேச்சிராஜ், காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன், உதவிப் பொறியாளா் சந்திரகுமாா் உள்ளிட்டோருடன் பாரதியாா் சாலையில் உள்ள கோயில்பத்து பகுதி ரயில்வே கேட், காமராஜா் சாலையில் ரயில் கடக்கும் பகுதி, சுரக்குடி அருகே ரயில் கடக்கும் பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது : கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையும், காமராஜா் சாலை மற்றும் சுரக்குடி பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதல் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு ரயில்வே மற்றும் புதுவை அரசால் மேற்கொள்ளவேண்டிய திட்டப்பணிகள் தொடங்கப்படும். மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும்போது, அந்த திட்டப் பணிகளுக்கு ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அப்பகுதியில் சீா்படுத்தவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றனா்.