/
ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலை துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பாபு, நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.










