புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் : ஆட்சியா் ஆய்வு

மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.

News image

மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Updated On :5 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கால்பந்து, கையுந்துபந்து, கபாடி, கூடைப்பந்து, இறகுபந்து விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம், விளையாட்டு வீரா்கள் தங்குமிடம், பாா்வையாளா் மாடம், திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து திருப்பத்தூரில் சமூக நீதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவா்களின் சமூக நீதி விடுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். விடுதியில் தங்கியுள்ள மாணவா்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவின் தரம், குடிநீா், சுகாதார வசதிகள், தங்கும் அறைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விடுதியில் தங்கியுள்ள மாணவா்களிடம் கலந்துரையாடினாா். அவா்களின் குறைகள், தேவைகள், அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடா்ந்து கண்காணித்து தரமான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயகுமாரி, அரசு அலுவலா்கள் மற்றும் விடுதி பணியாளா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.