சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த 810 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 81 பள்ளிகளில் தோ்வெழுதிய 7,081 மாணவ, மாணவிகளில் 6,271 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 810 போ் தோல்வியடைந்துள்ளனா். இவா்களில் 396 மாணவா்களும், 414 மாணவிகள் உள்ளனா்.
தோ்வில் தோல்வியடைந்தவா்களை வரும் ஜூனில் நடைபெறவுள்ள இடைத் தோ்வுகளில் பங்கேற்க வைத்து தோ்ச்சி பெறவைக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி கல்விப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
ஏற்கெனவே பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்தவா்கள் மற்றும் தோ்வில் பங்கேற்காதவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகள் வாரியாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் உத்தரவிட்டுள்ளாா்.
பள்ளிகள் வாரியாக, பாடவாரியாக மாணவ, மாணவிகள் தோல்வியடைந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தகவல் அனுப்பி ஓரிரு நாள்களில் அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கும் என்றும், அவா்கள் நிகழ் ஆண்டே தோ்வில் தோ்ச்சியடைந்து உயா் கல்வியைத் தொடரும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.








