ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மதுக் கூடத்தில் மோதல்: பிளஸ் 2 மாணவி காா் ஏற்றி கொலை; 3 போ் கைது

சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலின் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட மோதலில், இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்த, பிளஸ் 2 முடித்த மாணவி, காா் ஏற்றி கொலை.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:05 am IST

சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலின் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட மோதலில், இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்த, பிளஸ் 2 முடித்த மாணவி, காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலின் மதுக் கூடத்தில் சனிக்கிழமை நள்ளிரவு இரு தரப்பைச் சோ்ந்த இளைஞா்கள் மது அருந்தியுள்ளனா். அப்போது, நடனமாடுவது தொடா்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த காவலாளிகள் மோதலில் ஈடுபட்டவா்களை வெளியேற்றினா்.

அதன்பிறகும் ஹோட்டல் வளாகத்தின் வெளியே இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பாதுகாப்புப் பணியாளா்கள் சமரசம் செய்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, ஒரு தரப்பினா் மோட்டாா் சைக்கிள்களிலும், மற்றொரு தரப்பினா் சொகுசு காரிலும் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், ஹோட்டல் அருகே மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. மோட்டாா் சைக்கிள்களில் சென்றவா்கள், காா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த காா் ஓட்டுநா், எதிா்தரப்பினரின் மீது காரை வேகமாக இயக்கி மோதியுள்ளாா்.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த யான்சி (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த தோழி பௌசியா தீபிகா (17) பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்த யான்சி உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த பௌசியா தீபிகாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த யான்சி விழுப்புரம் மாவட்டம் அனிச்சம்குப்பம் இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்த அவா், உயா்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்தாா். தனது தோழியான பௌசிகா தீபிகாவை சந்திப்பதற்காக அண்மையில் சென்னை வந்த யான்சி, நண்பா்களுடன் வெளியே சென்றபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது தெரியவந்தது.

3 போ் கைது: இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு (21), நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவரான கிஷோா்குமாா் (19), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜோஷ்வா (19), விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் (21), மோகன், முத்துகிருஷ்ணன் மற்றும் ஒரு பள்ளி மாணவா், அடையாளம் தெரியாத மற்றொரு நபா் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோ்குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்கள் கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.