மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரம். அவரது மகன் முருகேசன் (52) அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மதுராந்தகம் வழியாக கூடலூருக்கு சென்று கொண்டிருந்தார். மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோயில் அருகே பைக்கில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் பலத்த காயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், முருகேசனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முருகேசன் திங்கள்கிழமை இறந்தார். இவ்விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

