புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பைக்கில் சென்றவர் வாகனம் மோதி சாவு

மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 10:38 pm

DIN

மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரம். அவரது மகன் முருகேசன் (52) அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மதுராந்தகம் வழியாக கூடலூருக்கு சென்று கொண்டிருந்தார். மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோயில் அருகே பைக்கில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் பலத்த காயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், முருகேசனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முருகேசன் திங்கள்கிழமை இறந்தார். இவ்விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.