/

500 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஜனவரி 2019, 4:10 am IST


மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலரும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவருமான கோ.அப்பாதுரை தலைமை வகித்து, 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். ஜமீன் எண்டத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பொன்.பூபாலன் வரவேற்றார்.
கீழ் அத்திவாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சண்முகம், அதிமுக கட்சி நிர்வாகிகள் லட்சுமணன், எம்.மணவாளன், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.