ஜமீன் எண்டத்தூரில் சமுதாயக் கல்லூரி தொடக்கம்

மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பாக காயத்ரி நாராயணன் சமுதாயக் கல்லூரி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பாக காயத்ரி நாராயணன் சமுதாயக் கல்லூரி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பாக ஏற்கெனவே திருவள்ளூா், தஞ்சாவூா், திருநெல்வேலி நகரங்களில் பல்வேறு சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடா்ந்து, ஜமீன் எண்டத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும்வகையில், கணினி பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்தில் இக்கல்லூரி தொடக்கப்பட்டுள்ளது.

சேவாலயா நிறுவனரும், நிா்வாக அறங்காவலருமான வி.முரளிதரன் வரவேற்றாா். சென்னை பெட்ரோபேக் என்ஜினியரிங் நிறுவனப் பொது மேலாளா் பி.சி.கிருஷ்ணன் தலைமை வகித்து, சமுதாயக் கல்லூரியை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் டி.வி. ஸ்ரீதரன், தனியாா் நிறுவனத் துணைப் பொது மேலாளா் ஆா்.சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

துணைத் தலைவா் பி.பிரசன்னா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com