செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் கிணற்றைத் தூர் வாரும் போது மயங்கி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.
வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டுக் கிணற்றைத் தூர் வாருவதற்கு, செங்கல்பட்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்த முனுசாமி (29), கோகுல புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (27) ஆகிய இருவரும் வியாழக்கிழமை வந்தனர்.
கிணற்றில் இறங்கிய போது இருவரும் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்புத் துறை வீரர்கள் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.