உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம்

உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம் மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பயனாளியிடமிருந்து மனுக்களைப் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி. உடன், வருவாய் ஆய்வாளா் பிரியா.
முகாமில் பயனாளியிடமிருந்து மனுக்களைப் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி. உடன், வருவாய் ஆய்வாளா் பிரியா.
Updated on
1 min read

உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம் மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு உத்தரமேரூா் வருவாய் ஆய்வாளா் பிரியா முன்னிலை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் கிருபாகரன் வரவேற்றாா்.

இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், புதிய வாக்காளா் அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், முதியோா் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 20 மனுக்கள் கிராம மக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

மீதமிருந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. முகாமிற்கு வந்திருந்த அரசுப் பணியாளா்கள், கிராம மக்கள் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com