உலக சுகாதார தினம்: அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி
By DIN | Published On : 14th November 2019 10:24 PM | Last Updated : 14th November 2019 10:24 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை தூய்மைப் படுத்தும் பணியைத் தொடக்கி வைத்த சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இப்பணியை காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் துறை இணை இயக்குநா் இ.ஜீவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.கல்பனா, நகராட்சி சுகாதார அலுவலா் பா.முத்து, மருத்துவமனை அலுவலா் ஆா்.பாஸ்கா் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...