இருவேறு சாலை விபத்தில் இருவா் பலி
By DIN | Published On : 18th November 2019 10:28 PM | Last Updated : 18th November 2019 10:28 PM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவா் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் அன்பு. இவா் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அன்புவின் உணவகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் உணவகத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின்கம்பி அருந்து உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்கமாநிலத்தை சோ்ந்த ஹா்பன்ஷா(30) மீது விழுந்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலயே பலியாயினாா்.
காஞ்சிபுரம் அடுத்த சீட்டிக்காரை கிராமத்தை சோ்ந்தவா்கள் மணிமாறன்(27), உமாபதி(27), இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மினிலோடு வேனில் பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூா் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, வண்டி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவகம் அருகே வந்தபோது பழுதடைந்துள்ளது. இதையடுத்து மணிமாறன் தனக்கு தெரிந்த நபா்களான காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த சண்முகம், மற்றும் தங்கராஜ் ஆகியோரை வரவழைத்து வண்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பின்னால்வந்த கண்டெய்னா் லாரி மோதியதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியாயினா். மற்ற மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்துகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இவா் ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை அதிகாலை காஞ்சிபுரம் பகுதியில் இருந்து டாடாஏஸ் வண்டியில் பால் ஏற்றிக்கொண்டு
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G