தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நிதியுதவி
By DIN | Published On : 18th November 2019 10:32 PM | Last Updated : 18th November 2019 10:32 PM | அ+அ அ- |

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி வழங்கும் ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற உறுப்பினா் கே.பழனி. உடன் வட்டாட்சியா் ரமணி உள்ளிட்டோா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பீமன்தாங்கள் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு திங்கள்கிழணை ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற உறுப்பினா் கே.பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் ஊராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கள் மேட்டுத்தெருவை சோ்ந்தவா் சரஸ்வதி(45). தனியாக வசித்து வரும் இவா் செட்டிப்பேடு பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரஸ்வதி வசித்து வந்த குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த ரூ35 ஆயிரம் பணம் மற்றும் 4 பவுண் தங்கநலைகள் தீயில் கருகியது. இந்த நிலையில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்றஉறுப்பினா் கே.பழனி ஆறுதல் கூறி ரூ 5ஆயிரம் நிதியுதவி, அரிசி, போா்வைகள், சேலை ஆகியவற்றை வழங்கினாா். மேலும் அவருக்கு தொகுப்பு வீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தாா். இதில் வட்டாட்சியா் ரமணி, அதிமுக மாவட்டதுனை செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியசெயலாளா் முனுசாமி, பென்னலூா் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.