ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

செங்கல்பட்டு நத்தம் ஓசூரம்மன் கோயிலில் தசரா திருவிழா விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை


செங்கல்பட்டு நத்தம் ஓசூரம்மன் கோயிலில் தசரா திருவிழா விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை யொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 50-ஆம் ஆண்டாக தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது. 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், நவராத்திரி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com