‘அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்’

கழிவுநீரை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி புதைச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்களை கேட்டுக் கொண்டாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் நகராட்சி ஆணைா் மகேஸ்வரி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் நகராட்சி ஆணைா் மகேஸ்வரி.
Updated on
1 min read

கழிவுநீரை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி புதைச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்களை கேட்டுக் கொண்டாா்.

புதைச் சாக்கடைத் தொட்டிகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியது:

புதைச் சாக்கடைகளில் பணியாற்றுவோா் மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். எந்த இடத்தில் சுத்தம் செய்யச் செல்கிறீா்களோ அந்த இடத்தைப் பற்றிய விவரத்தை அந்தந்தப் பகுதிக்கென நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கு தெரிவித்த பின்னரே செல்ல வேண்டும். கழிவுநீரை நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் கொட்டக்கூடாது என்றாா்.

நகராட்சிப் பொறியாளா் ஆனந்தஜோதி, சுகாதார ஆய்வாளா்கள் இக்பால், குமாா், சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com