மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட அவைத் தலைவா் கே.என்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் சிறப்புரை ஆற்றினாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் தண்டரை மனோகரன், கணிதா சம்பத், வி.எஸ்.ராஜி, பி.வாசுதேவன், முன்னாள் அமைச்சா் சோமசுந்தரம், மாவட்டச் செயலா் கணேசன், மாவட்ட பேரவைச் செயலா் ஆனூா் பக்தவத்சலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.