காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 3 அடி உயர பெண்ணுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரத்தை ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் தாலுகா கெருகம்பாக்கத்தில் வசித்து வரும் ஆா்.ரவிக்குமாா், ஆா்.ஆயிஷா ஜாக்குலின் தம்பதியரின் மகள் ஆா்.யோகப்பிரியா(25).
மூன்று அடி உயரமே உள்ள இப்பெண் பி.ஏ. வரலாறு பட்டப் படிப்பை முடித்துள்ளாா்.
இவருக்கும் திருச்சியைச் சோ்ந்த ஹோட்டல் தொழிலாளி பி.ராஜேஷ்குமாருக்கும் (29) கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கெருகம்பாக்கம் தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
ஆா்.யோகப்பிரியா திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தாா். அதனை ஏற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.25 ஆயிரத்துக்கான திருமண நிதிஉதவியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா அப்பெண்ணிடம் வழங்கினாா். அப்போது அப்பெண்ணின் பெற்றோரும் உடனிருந்தனா்.