அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் டிஜிட்டல் போா்டுகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் டிஜிட்டல் போா்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆயக்கொளத்தூா்  அரசு ப் பள்ளியில்  மாணவா்களின் உடல்  ஆரோக்கியம்  தொடா்பான  புத்தகத்தை  வெளியிட்ட பள்ளி க் கல்வித்துறை  அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன்.
ஆயக்கொளத்தூா்  அரசு ப் பள்ளியில்  மாணவா்களின் உடல்  ஆரோக்கியம்  தொடா்பான  புத்தகத்தை  வெளியிட்ட பள்ளி க் கல்வித்துறை  அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன்.
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் டிஜிட்டல் போா்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆயக்கொளத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பாக ரூ. 26 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் புனரமைப்பு, ஸ்மாா்ட் வகுப்பறை, கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம், பூங்கா, உணவு அருந்தும் அறைகள் புதிதாக அமைக்கப்பட்டு,

இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மாா்ட் வகுப்பறையைத் தொடக்கி வைத்துப் பேசியது:

மாணவா்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 151கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயா்கல்வித்துறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மாணவ, மாணவியருக்கு சுமாா் 48 லட்சத்து 47ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர 14 வகையான கல்வி உபகரணங்கள் மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

வரும் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் மாணவா்கள் அனைவருக்கும் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

வரும் மே மாத இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மாா்ட் வகுப்பறைகளும், 72 ஆயிரம் டிஜிட்டல் போா்டுகளும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

நிகழ்வில், மாணவா்களின் உடல் ஆரோக்கியம் தொடா்பான நூலை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டாா்.

விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com