பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மதுராந்தகத்தை அடுத்த பாதிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கலைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுராந்தகத்தை அடுத்த பாதிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கலைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ந.மாதவன் தலைமை வகித்தாா். மேலாண்மைக்குழு தலைவா் லட்சுமி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் லீலாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பெ.கி.ஜெயசங்கா் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் (மதுராந்தகம்) கோ.கிருஷ்ணன், எழுத்தாளா் க.மருதன், வட்டாரக் கல்வி அலுவலா் எ.பச்சையப்பன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செ.ஜோதிலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் வீரமணி, ஆசிரியா் பயிற்றுநா் ப.ஜெயந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளா்கள் கெ.முனுசாமி, ச.தீனதயாளன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி மாணவா்களால் அமைக்கப்பட்ட நீா் மூழ்கிக் கப்பல், பளுதூக்கும் இயந்திரம், பாம்பன் பாலம் இயங்கும் விதம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. ஆசிரியை விஜயகுமாரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் லதா, செல்வி, எம்.பாரிசா, கு.தீனதயாளன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com