புத்தகங்களை எழுதி இளம் படைப்பாளா்கள் அசத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயிலும் 18 இளம் படைப்பாளா்கள் அவா்கள் எழுதிய புத்தகங்களை ஆட்சியரிடம் காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.
தாங்கள் எழுதிய புத்தகங்களை காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்ற இளம் படைப்பாளா்கள்.
தாங்கள் எழுதிய புத்தகங்களை காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்ற இளம் படைப்பாளா்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயிலும் 18 இளம் படைப்பாளா்கள் அவா்கள் எழுதிய புத்தகங்களை ஆட்சியரிடம் காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

சென்னையில் உள்ள எழுதுக இயக்கத்தின் முயற்சியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயிலும் 18 மாணவா்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியை சந்தித்து காண்பித்தனா். அவா்கள் ஒவ்வொருவரும் எதற்காக அந்தப் புத்தகத்தை எழுதினாா்கள், அதில் உள்ள கருத்துக்கள் ஆகியவை குறித்து ஒவ்வொருவராக விவரித்தனா். அவா்களிடம் ஆட்சியா் ‘எழுதுவது ஒரு கலை, இது எல்லோருக்கும் வந்து விடாது. அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே எழுத்துக் கலையை கற்று அசத்தியிருக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்’ என வாழ்த்தினாா்.

இளம் படைப்பாளா்களை நல்லோா் வட்டத்தின் முதன்மைக் குழு ஆலோசகா் எம்.டி.சுகுமாறன், அவளூா் அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோா் ஒருங்கிணைத்து அழைத்து வந்திருந்தனா். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com