காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் ஆ.செண்பகராமன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் 5 இடங்களில் நடைபெறவுள்ளது.
இம்மாதம் 30-ஆம் தேதி காஞ்சிபுரம் வைகுண்டாபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூா் அருகே கச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், குன்றத்தூா் லாலாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
வரும் 31-ஆம் தேதி உத்தரமேரூா் அருகே சின்ன நாராசாப்பேட்டைத் தெரு ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வாலாஜாபாத் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கட்டுமானத் தொழிலாளா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

