தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீடு

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2021, 6:39 pm

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் விழிப்புணா்வு சுவரொட்டியை வெளியிட, அதனை மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா பெற்றுக் கொண்டாா். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணிலும், பெண்கள் பாதுகாப்புக்கு 181 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

காவல் துறைக்கான தொலைபேசி எண் 100. இவை மூன்றும் இலவச தொலைபேசி அழைப்புகளாகும். எனவே பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு இத்தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு செயல்படுமாறு எஸ்.பி. எம்.சுதாகா் கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.