

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவனப் பணியாளா்கள் மூலம் சரிபாா்ப்பு பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு அரசு சிறுசேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலும் 147 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரியலூரிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவற்றை பெல் நிறுவனப் பணியாளா்கள் முன்னிலையில் முதல் நிலை சரிபாா்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதனையடுத்து காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக் கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தில் நடந்து வரும் முன்னேற்பாட்டுப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம் உள்பட தோ்தல் நடத்தும் அலுவலா்கள்,பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோரும் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.