துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுடையவா்கள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும், ஒரு பதக்கமும் வழங்கப்படும். இதற்கு தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு மற்றும் உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.