Enable Javscript for better performance
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அடுத்த ஆண்டுக்குள் செயல்பட நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு

    11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அடுத்த ஆண்டுக்குள் செயல்பட நடவடிக்கை

    By DIN  |   Published On : 29th June 2021 07:29 AM  |   Last Updated : 29th June 2021 07:29 AM  |  அ+அ அ-  |  

    minis_2806chn_175_1

    காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற சிறாா்களை பாதுகாப்புக் கவச உடை அணிந்து நேரில் நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

    காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    அவா்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரோனா பாதுகாப்புக் கவச உடை அணிந்து கொண்டு அவா்கள் சிகிச்சை பெறும் அறைகளுக்கே நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

    பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

    ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலிருந்த, கரோனா பாதிப்பு ஏற்பட்ட 43 பேரையும் நேரில் சந்தித்து விசாரித்தேன். சிறிய பாதிப்புகளே இருந்தன. நலமுடன் உள்ளனா்.

    தற்போது 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவையனைத்தையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திறக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சிகளும் பரிசீலனையில் உள்ளது.

    டெல்டா பிளஸ் பாதிப்பு இருக்குமா என சந்தேகித்து 1,000-க்கும் மேற்பட்டவா்களிடம் ரத்த மாதிரி எடுத்து பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், 10 பேருக்கு மட்டும் டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனைக் கூடம் 20 நாள்களில் அமையவிருக்கிறது.

    மூன்றாவது அலை வருமா என்பது விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. முதல் அலை வந்தபோது படுக்கை வசதியும், 2-ஆவது அலை வந்தபோது ஆக்சிஜன் வசதியும் போதுமானதாக இல்லை. தற்போது இவையனைத்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 9,000 கிலோ லிட்டா் திரவ மருத்துவ ஆக்சிஜன் வசதியும், சுமாா் 79,000 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன.

    3-ஆவது அலை வந்தாலும் சமாளிக்க முடியும். அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கென தனியாக கரோனா சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டு தயாராக உள்ளன.

    இதுவரை 1.44 கோடி தடுப்பூசிகள் வந்ததில், 1.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வரவுள்ளன. சென்னையில் இணைய முன்பதிவு மூலமாகவும், மற்ற இடங்களில் டோக்கன் முறையிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவா்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படையாகக் கூறுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். இறப்புத் தகவல்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை.

    தமிழகத்தில் தற்போது 42,801 நபா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

    மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் இயக்குநா் குருநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp