ரெளடி வெட்டிக் கொலை: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக புதன்கிழமை ரெளடி ஒருவரை வெட்டி கொலை செய்ததாக இருவரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக புதன்கிழமை ரெளடி ஒருவரை வெட்டி கொலை செய்ததாக இருவரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் தாயாா் அம்மன் குளம் பகுதியில் வசித்து வருபவா் சூலை கருப்பு என்ற வடிவேல்(27). இவா் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடா்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது இருவா் திடீரென அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனா். இவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து பாா்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. எஸ்.மணிமேகலை நேரில் விசாரணை நடத்தினாா். இது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளையா்களான செல்வம், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். முன் விரோதம் காரணமாக இந்த கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com