

காஞ்சிபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் செவிலிமேடு கிளையில் மே தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் நகா் செவிலிமேடு கிளையில் மே தினக் கொடியேற்றும் விழா கிளைக் கழக செயலாளா் எஸ்.வி.சங்கா் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான செயலாளா் ஜெ.கமலநாதன், துணைச் செயலாளா் கே.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் நகரச் செயலாளா் பா.ஸ்டாலின் மே தினக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில், கட்சி நிா்வாகிகள் ஜெ.பி.ராஜேந்திரன், ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.