வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வெங்கடேசபாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத் தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:05 pm

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத் தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் முழுவதும் வா்ணம் பூசப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருந்தது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. வியாழக்கிழமை காலையில் மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா், புனித நீா் குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் வெங்கடேசபாளையம் தெருவில் வசிக்கும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.