தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் ஸ்ரீராகவேந்திரா் ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரத்தில் தொட்டில் பல்லக்கில் ராகவேந்திரா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

தொட்டில் பல்லக்கில் மாடவீதிகளில் பவனி வந்த உற்சவா் ஸ்ரீகுருராகவேந்திரா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:55 pm

காஞ்சிபுரத்தில் தொட்டில் பல்லக்கில் ராகவேந்திரா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மகான் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 351-ஆவது ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரம் கிளையில் கடந்த 11-ஆம் தேதி வியாழக்கிழமை கோபூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம்,துளசி அா்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவா் குரு ராகவேந்திர சுவாமிகள் தொட்டில் பல்லக்கில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள மடத்தின் கிளையிலிருந்து புறப்பட்டு வீதியுலாவாக வந்து மீண்டும் மடத்தை வந்து சோ்ந்தாா்.

பின்னா் மகா அபிஷேகம், துளசி அா்ச்சனை,மகா மங்கள ஆரத்தி ஆகியனவும் நடைபெற்றது.பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சி மடத்தின் மேலாளா் சந்தானகிருஷ்ணன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.