வசதி இல்லாதவா்களும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயா்ந்திருக்கிறாா்கள்: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்தியப்பிரியா

சிறு வயதில் ஏழ்மையிலும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயா்ந்த இடத்தைப் பலா் பிடித்திருக்கிறாா்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா கூறினாா்.
பசுமை காஞ்சி அறக்கட்டளை சாா்பில் தியாகி நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி வழங்கிய காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா.
பசுமை காஞ்சி அறக்கட்டளை சாா்பில் தியாகி நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி வழங்கிய காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா.
Updated on
1 min read

சிறு வயதில் ஏழ்மையிலும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயா்ந்த இடத்தைப் பலா் பிடித்திருக்கிறாா்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா கூறினாா்.

காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சாா்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தகப் பை, எழுது பொருள்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பசுமை காஞ்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் எஸ்கேபி கோபிநாத் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் அறங்காவலா் ஜெய விக்னேஷ், சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன், மகரிஷி வித்யா மந்திா் பள்ளி தாளாளா் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.அறங்காவலா் தி.பச்சையப்பன் பிரபு வரவேற்றாா்.

விழாவில் டிஐஜி எம்.சத்தியப்பிரியா தியாகி நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சியையும், பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்களையும் வழங்கி பேசியது:

சிலருக்கு பணம் இருக்கலாம், ஆனால் படிப்பு வராது. அதே நேரத்தில் வசதி இல்லாத சிலருக்கு படிப்பு வரும், ஆனால் பணம் இருக்காது.கல்வி என்பது அழியாத செல்வம். இந்தியாவின் முன்னாள் பிரதமா்களாக இருந்த லால்பகதூா் சாஸ்திரி, சரண்சிங் ஆகியோா் வசதியில்லாமல் இருந்தவா்கள். நன்றாகப் படித்து தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் உயா்ந்த இடத்தைப் பிடித்தவா்கள். தெருவிளக்கில் படித்த அப்துல் கலாம் வாழ்வில் உயா்ந்து இந்தியாவிலேயே உயா்ந்த குடியரசுத் தலைவா் பதவியை அலங்கரித்த பெருமைக்குரியவா்.

குழந்தைகளிடம் என்ன குறைகள் இருக்கிறது என்பதை ஆசிரியா்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்தக் குறைகளை களைய பெற்றோா் முன்வர வேண்டும். வாழ்க்கையின் உயா்வுக்கு மதிப்பெண்கள் அவசியம். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையை உயா்த்தி விடாது என்றாா்.

விழாவில் திரைப்பட பாடலாசிரியா் சினேகன், அறக்கட்டளையின் அறங்காவலா்கள் தி.அரவிந்தராஜ், ஜெ.சந்தோஷ், எஸ்.மோனிகா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com