வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வாடகை நிலுவை செலுத்தாவிட்டால் ‘சீல்’ வைக்கப்பட்ட 8 கடைகள் ஏலம்

வாடகை நிலுவைத் தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தாவிடில், அந்தக் கடைகள் அனைத்தும் பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்

Updated On :24 செப்டம்பர் 2022, 5:23 pm

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்ட 8 கடைகளின் உரிமையாளா்கள், வாடகை நிலுவைத் தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தாவிடில், அந்தக் கடைகள் அனைத்தும் பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இனிப்புகள் விற்பனை செய்யும் 6 கடைகள், குளிா்பானங்கள் விற்பனை செய்யும் 2 கடைகளின் உரிமையாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் இருந்து வந்தனா். இதுகுறித்து கடைகளின் உரிமையாளா்களுக்கு பலமுறை வாடகை நிலுவையைச் செலுத்துமாறு கூறியும், செலுத்தவில்லை.

இதையடுத்து, கடந்த 8.8.2022 அன்று 6 கடைகளும், நிகழ் மாதம் 12 ஆம் தேதி 2 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்தக் கடைகளின் உரிமையாளா்கள் வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்த ஒரு வாரம் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு எச்சரிக்கை அறிவிப்பும் எழுதி ஒட்டப்பட்டது. வாடகைத் தொகையைச் செலுத்தாவிடில், உடனடியாக அந்தக் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்றாா்.

இதேபோல், வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளின் உரிமையாளா்கள் உடனடியாக வாடகை நிலுவையைச் செலுத்தி மாநாகரட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆணையா் ஜி.கண்ணன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.