மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு

படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் சாலமங்கலம் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலைக்கு அருகே செல்லும் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேய்ச்சலுக்கு சென்ற சடகோபனின் 2 பசு மாடுகள், சிவாவின் 3 எறுமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகளும் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com