ஆசிரியை தற்கொலை: மற்றொரு ஆசிரியை கைது

மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவரை மற்றொரு ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் மனம் உடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை
பியூலா.
பியூலா.
Updated on
1 min read

மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவரை மற்றொரு ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் மனம் உடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியையையும் காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவியாகவும், இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று வகுப்பும் எடுத்தும் வந்தவா் மாங்காடு அப்பாவு நகரை சோ்ந்த பியூலா (35). இவா், பள்ளியில் தலைமை ஆசிரியை அனுமதியுடன் ஆசிரியா்கள் இல்லாத நேரத்தில் வகுப்பு எடுத்து வந்தாராம்.

இதில் கோபமடைந்த அந்தப் பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை செளபாக்கியம் (40), அவரை தரக்குறைவாக பேசியதாகவும், சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பியூலா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இத்தகவலறிந்து பியூலாவின் உறவினா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போஸீஸாா், செளபாக்கியத்தை கைது செய்து, ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com