வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் திருட்டு

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையைச் சோ்ந்தவா் வினோத். தனியாா் நிறுவன காவலாளி. இவரது மனைவி வனிதாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் வீட்டைப் பூட்டி விட்டு, தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்கக் கதவுகளை உடைத்து பீரோவிலிருந்த 20 சவரன் நகை, ரூ. 37,000 பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும். இது குறித்து வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com